HATE ME

30/recent/ticker-posts

எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கஃபார்கான் I👉 Translate your language option down

பாரத ரத்னா பாதுஷா கான் ..!!


எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கஃபார்கான் அவர்கள் எப்போதும் ஒரு துணிப் பையை தன்னுடனேயே வைத்திருப்பார் . 
அதை தொடுவதற்க்கு கூட யாரையும் அனுமதிக்க மாட்டாராம். மகாத்மா காந்தி கூட இதுபற்றி பலமுறை அவரிடம் கேட்டதுண்டு - பலமுறை கிண்டல் செய்ததுண்டு. கஸ்தூர்பா காந்தி அவர்களும் காந்தியின் கிண்டலை கண்டித்ததும் உண்டு. அப்போதும் கூட, அந்த பையில் இருப்பதை பற்றி அவர் சொன்னதில்லை - எவரையும் தொட அனுமதித்து இல்லை . 
1969 ல் மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, அன்னை இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்தார். அவரை இந்திரா காந்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் விமானநிலையத்தில் சென்று வரவேற்றனர் .

நீங்கள் காண்பது அந்த படம் தான் ..! வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின் - மரியாதை நிமித்தமாக , அந்த பையை கொடுங்கள் , நாங்கள் கொண்டு வருகிறோம் என இந்திராஜி கேட்க - அப்போதும் , அவர் அந்த பையை மற்றவரை தொட கூட அனுமதிக்கவில்லையாம்.. 

அத்தோடு, இது ஒன்றாவது என்னோடு இருக்கட்டும். அதையும் பிடுங்க பார்க்கிறீர்களே என்று , கான் அவர்கள் சொல்ல - அந்த இடத்திலேயே கண்கலங்கி விட்டார்களாம் -அன்னை இந்திரா காந்தியும் , ஜேபியும்... 

1985 ல் அருமைத் தலைவர் ராஜீவ் காந்தி அழைப்பின் பேரில் இந்தியா வந்தார் எல்லை காந்தி .. மகாத்மா காந்தி கிண்டல்கள், அதற்கு காஸ்தூர்பா காந்தி கண்டனங்கள் , அன்னை இந்திராஜிக்கு நேர்ந்தது என அனைத்தையும் அறிந்திருந்த ராஜீவ் காந்தி அவர்களும் - கான் சாஹேப் கையிலிருந்த பையை காட்டி " இந்த பையில் அப்படி என்னதான் இருக்கிறது . நான் பார்க்கலாமா .. " என்று கேட்க - ஒரு சிரிப்பு சிரித்த பாதுஷா - 

'நீ எனது குழந்தை. உனக்கு காட்டா விட்டால் , நல்லாயிருக்காது. மேலும், இந்த கிழவன் அப்படி என்ன தான் வைத்திருந்தான் என்று மற்றவர்கள்  ஏதாவது பேசுவார்கள் . இதோ, உனக்கு காண்பிக்கிறேன் என்று பையை திறந்து காட்டினாராம். அதில், உடுத்தும் உடைகள் இரண்டு செட் இருந்ததாம்.! இந்த மாபெரும் மனிதருக்கு 1989 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது ..!

Post a Comment

0 Comments